முகாநூளில் தொடர

ஞாயிறு

கொடிது கொடிது வறுமை கொடிது


தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்து விடு
என்று சொன்னார் புரட்சி கவிஞர் பாரதி. ஆனா நீங்க ஜகத்தைலாம்  அழிக்க வேண்டாம் , எத்தனையோ பேர் ஒரு வேளை உணவு கூட இல்லாம  கஷ்டப்படுறாங்க, அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவிய பண்ணுங்க...
தினமும் ஒரு அஞ்சு ரூபா சேர்த்து வச்சு, ஒரு மாதத்திற்கு ஒரு நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தா கூட அது ஒரு சரா சரி மனிதனின் ஒரு நாள் உணவிற்கு வழி வகுக்கும். நான்
இன்னைக்கு ரேஷன் கடைல ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைக்குது ஆனா அதை வாங்க ரேஷன் கார்டு இருக்கணும்னு ல... பல விடுதிகள்ள
இருக்குற குழந்தைகள், முதியோர்கள் உணவு இல்லாம கஷ்டபடுறாங்க, அவங்கள்ளுக்கு உங்களால முடிஞ்ச உதவிய பண்ணுங்க. நீங்க செய்ற  ஒரு ஒரு சின்ன உதவி கூட, அவங்களுக்கு பெரிய உதவி தான்.
ஸ்டார் ஹோட்டல் போய் ஆயிரம் ஆயிரமா காசா வீண் அடிக்க யோசிக்காத நாம , ஒரு சின்ன தொகைய  கஷ்ட படுரவங்களுக்கு கொடுக்க யோசிக்கிறோம்.

நான் உங்கள சாலைல பிச்சை கேக்குறவங்களுக்கு கொடுங்க இன்னு சொல்லல, கஷ்டப்படுரவங்களுக்கு உதவி பண்ணுங்க இன்னு தான் சொல்றேன் உதவிக்கும் பிசைக்கும் வித்தியாசம் உங்களுக்கே நல்லா தெரியும் இன்னு நினைக்குறேன்.

ஒரு வேளை உங்களால பண உதவி பண்ண முடியலைன்னா  கூட, உங்களுடைய பழைய உடைகளை கொடுத்து உதவலாம், அது உங்களுக்கு
தான் பழசு அவங்களுக்கு அது புதுசு ல.


கோவில் உண்டியல ஆயிரமா ஆயிரமா காசு போடுறவங்க தயவு செஞ்சு யோசிங்க அங்க போடுற பாதி காச ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்து உதவுனா போதும்ங்க அது கடவுள போய் சேரும். தயவு செஞ்சு எதாச்சும் பண்ணுங்க சார்......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.