முகாநூளில் தொடர

புதன்

ரயிலில் ஏற்ப்பட்ட பயங்கர விபத்துக்கான காரணம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு அதிவேக தொடருந்தில்/ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். இந்த செய்தி சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய செய்தி.
இதை தொடர்ந்து திடீரென்று ரயிலில் தீப்பிடிக்க காரணம் என்ன
 என்று ஆராய்ந்ததில் சில பேர்,தொடருந்தில் உள்ள மின்னேற்றம் செய்யும் சொருகியில்/குதையில் இருந்து பயங்கரமான வெடி சத்தம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறனர்.
கீழ் தட்டு மக்களில் இருந்து மேல்தட்டு மக்கள் வரை அனைவரும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல பேர் கையடக்க தொலைபேசிகளை சரியான பயன்பாட்டுடன் இயக்குவதில்லை.
இன்னும் சொல்ல போனால் கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை பயன்படுத்தும் விதிமுறைகளை யாரும் சரிவர பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்புகள் இருக்கும்.
இதனால் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் அனைவருக்கும், கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சில டிப்ஸ்கள். கையடக்க தொலைபேசி மின்னேற்றி/சார்ஜ் செய்யும் போது, வரும் போன்கால்களுக்கு பதிலளிப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
ஆனால் நிறைய பேர் கையடக்க தொலைபேசி சார்ஜரில் போட்டுவிட்டும், கையடக்க தொலைபேசில் பேசி கொண்டே இருக்கின்றனர். இதனால் ப்ளக்கில் இருந்து அதிகப்படியான நெருப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.
கையடக்க தொலைபேசி முழுமையாக மின்னேறிவிட்டது என்று சில கையடக்க தொலைபேசிகளில் தகவல்கள் வெளியாகிறது. இந்த தகவலை கையடக்க தொலைபேசில் பார்த்த உடன் மின்னேற்றிஜில் இருந்து மொபைலை நீக்கிவிடுவது நல்லது.
ஒவ்வொரு கையடக்க தொலைபேசிக்கும், எத்தனை மணி நேரம் மின்னேற்றி செய்ய வேண்டும் என்று சில வரம்புகள் உள்ளது. இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிலர் இரவில் மின்னேற்றிஜில் போட்ட கையடக்க தொலைபேசி காலையில் தான் எடுப்பார்கள். இது மிக ஆபாயத்தை ஏற்படுத்தும். இது போன்ற செயல்களால் மொபைல் வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
சரியான கையடக்க தொலைபேசி மின்னேற்றி பயன்படுத்துவது அவசியமாகிறது. தனது கையடக்க தொலைபேசி மாடலுக்கு பொருந்தாத மின்னேற்றி கூட பொருத்தி பார்த்து சோதனை செய்கின்றனர். இப்படி கையடக்க தொலைபேசிக்கு பொருந்தாத மின்னேற்றி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு கையடக்க தொலைபேசின் மின்னேற்றி வேரொரு கையடக்க தொலைபேசியில் கலட்டி போட்டு சிலர் சார்ஜ் செய்வதையும் நாம் அன்றாட வாழ்க்கைகளில் பார்க்கிறோம். இது போல் ஒரு கையடக்க தொலைபேசின் பேட்டரியினை, வேறொரு பேட்டரியில் போட்டு சார்ஜ் செய்வதும் தவறு.
பொதுவாக ஒரு பேட்டரி, வேறொரு கையடக்க தொலைபேசியில் பொருந்தாது. ஆனால் சில கையடக்க தொலைபேசிகள் சார்ஜாக வாய்ப்பிருக்கிறது. இப்படி சார்ஜாகும் போது வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
கையடக்க தொலைபேசியில் சார்ஜ் செய்வது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை சரியாக செய்யாது போனால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும். மேலே கூறப்பட்டுள்ள தவறுகளை தவிர்ப்பது மிக நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.