முகாநூளில் தொடர

சனி

பாவம் ஈமுக்கள்!



'ஈமு கோழிப் பண்ணை வைத்தால் பணம் கூரையைப் பிடித்துக் கொண்டு கொட்டும்' என்று பொதுமக்களை ஏமாற்றி பணத்தைச் சுருட்டிய கம்பெனிகள் இப்போது ஒவ்வொன்றாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளன. ஏமாந்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க... ஈமு கோழிகளை அம்போவென விட்டுவிட்டு ஓட்டமெடுத்துவிட்டனர் மோசடி பேர்வழிகள்.

தற்போது இந்த ஈமு கோழிகளுக்கு உணவிடுபவர்கள் யாருமில்லாததால்... அவையாவும் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு இறக்க ஆரம்பித்துள்ளன. இறந்து கிடக்கும் கோழிகளை மற்ற கோழிகள் உண்ணவும் ஆரம்பித்துள்ளன.

மோசடி பேர்வழிகள் நடத்திய நாடகத்தில் ஏதுமறியா இந்த கோழிகள் தற்போது இத்தகைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது... பாவத்திலும் பாவம்.

தமிழக கால்நடைத்துறை இந்த விஷயத்தில் தலையிட்டு, அப்பாவி கோழிகளை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டு அவற்றை பாதுகாக்க முன்வரவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.